நடிகை ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் கபாலி,ஆல் இன் ஆல் அழகுராஜா , சித்திரம் பேசுதடி-2, உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர் தமிழையும் தாண்டி பல மொழிகளில் பல படங்களிளில் நடித்துள்ளார். அடிக்கடி தனது மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக தைரியமாக இவர் தெரிவித்து விடுவார்.
unknown nodeRadhika Apte [Image Source: Twitter ]
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் “பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பதை சிலர் அவர்களின் உரிமையாகவே கருதுவார்கள்” என பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” என்னுடைய உடல் எடை 3-4 கிலோ அதிகரித்ததால், பட வாய்ப்புகளை இழந்தேன்.
unknown nodeRadhika Apte [Image Source : Twitter]
நான் பாலிவுட்டில் எனது திரைப்பயணத்தை தொடங்கியபோது, என் மூக்கின் அமைப்பு சரியாக இல்லை. எனது மார்பகங்கள் பெரிதாக இல்லை என விமர்சித்தார்கள். பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பதை சிலர் அவர்களின் உரிமையாகவே கருதுவார்கள். இது தவறு” என கூறியுள்ளார்.
unknown nodeRadhika Apte [Image Source: Twitter ]
மேலும். இதைப்போலவே முன்னதாக ஒரு பேட்டியில் ராதிகா ஆப்தே” சினிமாவில் பணியாற்றும் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பெயர், புகழ் என அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.