அப்பாஸ் படத்தை பார்த்து விட்டு உன்ன மாதிரியே அவர் இருக்கார்னு அப்பாஸிடமே கூறிய நபர்..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். முதன் முதலாக இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். முதன் முதலாக இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து நடிகர் அப்பாஸிற்கு  கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணமானது அதற்குப் பிறகு சில திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களிலும் விளம்பரம்  படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக கோ படத்தில் ஒரு பாடலில் மட்டும் வந்திருப்பார் அதற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அப்போது அவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை பார்க்கையில் தற்போது அவர் நடித்து இருந்தால் இப்போது விஜய் அஜித்திற்கு இணையாக வந்திருப்பார் என்று  ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் சினிமாவில் இருந்து விலகி இது குறித்து சில விஷயங்களை கூறிஉள்ளார்.  இதில் அவர் பேசியது இந்தியா போன்ற ஒரு நாட்டில் சினிமா கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  ஆனால் நியூஸிலாந்தில் அப்படியில்லை அதனால் அங்கு சென்றுவிட்டேன்.

அங்கு சென்று நான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்த பிறகு மோட்டார் சைக்கிள் கடையில் மெக்கானிக்காக பணியாற்றினேன். அதற்கு பிறகு  கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன். இதனை எல்லாம் நான் விரும்பி ரசித்து செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

unknown node

இந்த நிலையில் மேலும் பேசிய அப்பாஸ் நான் நியூசிலாந்தில் வேலை செய்யும் போது நான் நடித்த ஒரு படத்தை பார்த்து விட்டு என்னுடன் வேலைசெய்யும் நண்பர்  ஒருவர் உங்களைப் போலவே இவர் இருக்கிறார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.