பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது என விவாகரத்து செய்த பிரபல நடிகரின் மனைவி

this news gives informartion about The wife of the famous actor who divorced herself could not live without money-panam ilamal

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் ,நாதஸ்வரம் ஆகிய பிரபலமான தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சாய் சக்தி.

சீரியல் மூலமாக பல சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் ,நாதஸ்வரம் ஆகிய பிரபலமான தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சாய் சக்தி.

மேலும் பொழுதுப்போக்கு நிகழ்ச்சியான கிட்சன் சூப்பர் ஸ்டார் ,ஜூலியுடன் ஜோடி ஷோஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தற்போது சாய் சக்தி நடிக்க சின்னத்திரையில் வாய்ப்புகள் குறைந்துள்ளது.இதனால் இவர் வேலைக்காக வளைகுடா நாட்டுக்கு சென்றார்.அங்கு அவருக்கு வேலை சரியாக அமையாததால் திரும்பவும் இந்தியா வந்து விட்டார்.

இந்நிலையில் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது என அவரது மனைவியும் விவாகரத்து செய்து விட்டாராம். சின்னத்திரையில் நடிக்க தீவிரமாக வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் இருந்து நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வேண்டும் என கூறினர். எங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டது என கூறினார்.அவர்கள் கேட்டது தனக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது என்றார்.