தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயங்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, இந்த படத்திற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறபடுகிறது, இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் இந்த படத்திற்கு கருடன் என்று டைட்டில் வைத்து ஒரு போஸ்ட்டரை எடிட் செய்து வெளியிட்டனர்.
மேலும் தற்பொழுது இந்த திரைப்படத்தின் கதையை பற்றி தகவல் கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் கருட புராணம் என்ற கதையில் ஒரு கதாபாத்திரத்தை தழுவி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.