இப்படி நடந்திருக்க கூடாது! மன்னிப்பு கேட்ட ராகவலரன்ஸ்...நடந்தது என்ன?

ராகவலரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான

chandramukhi 2 audio launch fight

ராகவலரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசைவெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.  இந்த இசைவெளியீட்டு விழாவின் போது காண வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கிருந்த பவுன்சர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில்,சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் மாணவர்களை தாக்கிய விவகாரத்தில்  நடிகர்ராகவாலாரன்ஸ்தனது ட்வீட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” சந்திரமுகி2- ல் நடந்த அசம்பாவிதம் பற்றி இப்போதுதான் அறிந்தேன்திரைப்பட ஆடியோ வெளியீடு, அங்கு பவுன்சர்களில் ஒருவர் கல்லூரி மாணவருடன்  சண்டையில் ஈடுபட்டார். முதலில் இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் நானோ அல்லது ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. எங்கள் மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் & அவர்கள் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அப்படிப்பட்ட ஒரு நபராக இருப்பதால், இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறு & குறிப்பாக மாணவராக இருக்கும் போது இது நடந்திருக்கக்கூடாது. அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.