மீண்டும் லண்டனில் துப்பறிய தொடங்கிய இயக்குனர் விஷால்.! துப்பறிவாளன்-2 புதிய அப்டேட்.!

விஷால் இயக்குனராக அறிமுகமாகும் துப்பறிவாளன் -2 படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளதாம்.
மிஷ்கின் இயக்கத்தில் 2017இல் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் துப்பறிவாளன். இதில் படத்தின் கதையும், அதனை சொல்லிய திரை மொழியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக காட்சியமைப்புகள் இருந்தன. அந்த வரவேற்பை கண்டு அப்படத்தின் 2ஆம் பாகம் தயாராக இருந்தது.
கொரானாவுக்கு முன்னர் துப்பறிவாளன்-2ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்டபோது மிஷ்கின் தான் இயக்குனர். விஷால் தயாரிப்பாளராக இருந்தார். அதன் பின்னர், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.
அதன் பின்னர் விஷாலே இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் இப்பட வேலைகள் நடைபெறாமலே இருந்தது. அதனால், படம் டிராப் என கூறப்பட்டது.
ஆனால், அதனை பொய்யாக்கும் விதமாக தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஆரம்பிக்க உள்ளதாம். இப்பட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கி, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் துப்பறிவாளன் 2 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025