நாய் சேகராக மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல்..!!

Actor Vadivelu is all set to star in director Suraj's Nai Sehgar.

நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால், மீண்டும் நடிகர் வடிவேலு ஹீரோவாக சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளாராம், ஆம், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதாகவும், அந்த படத்திற்கு டைட்டில் நாய் சேகர் என வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை, தலைநகரம் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.

நாய் சேகராக மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல்..!!