மீண்டும் உருவாகுமா இரம்புத்திரை-2.? ஆக்ஷன் கிங்குடன் மீண்டும் நடிக்க ஆசைப்படும் விஷால்.!

நடிகர் விஷால் நேற்றைய தினம் அர்ஜுன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மீண்டும் உங்களுடன் இணைந்து நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் விஷால் நேற்றைய தினம் அர்ஜுன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மீண்டும் உங்களுடன் இணைந்து நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் இரும்புதிரை. இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்து கலக்கியிருப்பார். தொழில்நுட்ப வளர்ச்சியால் நடைபெறும் பிரச்சனைகள் மற்றும், அதனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை அர்ஜூன் அவர்கள் கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் குருவான அர்ஜூனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், உங்களுடன் மீண்டும் நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார். அதற்கு ரசிகர்கள் இரும்புதிரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

unknown node