ஏமாற்றிய ராகுல், கைகொடுத்த கெயில்.. ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தொடர்ந்தது.

துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் கலமிறங்கினார்கள். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.

unknown node

அதிரடியாக ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும்.

மயங்க் அகர்வால் 22 மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார்.

20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

ராஜஸ்தான் சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெடுகளையும், குல்கர்னி மற்றும் கௌதம் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்க இருக்கிறது ராஜஸ்தான்.