பீகார் மாநிலம் பிஹ்தாவில் 2 குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். பீகாரின் சோன் ஆற்றில் நேற்று (செப் 29) சட்டவிரோதமாக மணல் எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோதலின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெகுசராய் பகுதியில் உள்ள […]
ரஷ்யாவின் ஒரு பள்ளியில், துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 21 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ரஷ்யாவில் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள சுமார் 1000 பேர் படிக்கும் பள்ளியில் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கே தாறுமாறாக துப்பாக்கிச்சூடு நடத்தினார் பின்னர் அவர் தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவர் சுட்டதில் ஏழு குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள், இரண்டு பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக […]
மத்திய டெல்லியின் படேல் நகரில் சூதாட்டத்திற்காக ₹ 200 கொடுக்க மறுத்தவரைக் கொன்ற சிறுவர்கள் கைது. 15 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள், சூதாட்டத்திற்கு ரூ.200 தேவைப்பட்டதால் அருண் பஞ்சால் என்பவரை வற்புறுத்தியதாகவும், அவர் தர மறுத்ததால் கத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி அவரைக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், இந்த கொலையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் […]
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் வார்ஜே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தன் சொந்த பாட்டியின் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேத்தி போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 36,000 ரூபாய் பணம் மற்றும் தனது பாட்டியின் தங்கச் சங்கிலி மற்றும் காதணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். பேத்தியின் முதற்கட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில்,கவுரி […]
உ.பி.யின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு இளம் சகோதரிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வியாழக்கிழமை என்கவுன்டருக்குப் பிறகு அவரது காலில் சுட்டுக் கைது செய்யப்பட்டார். காயமடைந்த நபரை வயலில் இருந்து போலீசார் வெளியே கொண்டு வீடியோ வெளியாகியுள்ளது.சகோதரிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். लखीमपुर का हैवान जुनैद !! pic.twitter.com/MpTx0kCwcE — Dr. Shalabh Mani Tripathi (@shalabhmani) September […]
நடிகர் சல்மான் கானை கொல்ல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு பிளான் பி இருந்ததாக டெல்லி மற்றும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொடூரமான கொலையின் மூளையாக இருந்தவர், அவரது ஹிட்லிஸ்ட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. திகார் சிறையில் இருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் […]
கர்நாடக அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ.5 கோடி அபராதமும் விதித்து கர்நாடக சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வியாழன் அன்று கேப்பால்லி ஆனந்த், எச்.எஸ்.நாகலிங்கசுவாமி, சந்திரசேகர், எச்.கே.நாகராஜா மற்றும் கே.பி.ஹர்ஷன் ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என்றும், மொத்தம் ரூ.5,02,75,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பளித்தார். மாண்டியா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (முடா) இழப்பீடாக […]
பெங்களூரு யெலஹங்காவில் குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயது ஆண் மற்றும் 14 வயது சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளதாக கர்நாடக போலீசார் இன்று தெரிவித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி, குழந்தைகள் நலக் குழுவின் காவலுக்கு அனுப்பப்பட்டு, தற்போது பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள பெண்களுக்கான அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ‘திருமணம்’ செய்தவர் சிக்கபெத்தஹள்ளியைச் சேர்ந்த நில உரிமையாளர் என்.குருபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் தினக்கூலி […]
நொய்டா: லலிதா என்ற பெண் கடந்த இரண்டு மாதங்களாக போலி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நபர் தலைமை தாங்கிய IVF மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அன்றைய தினம், தீவிர அலட்சியம் மற்றும் அவசரகால சேவைகள் இல்லாததால் கோமா நிலைக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது குடும்பத்தினரால் பிஸ்ராக்கில் உள்ள ரியாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆகஸ்ட் 26 அன்று சிகிச்சைப் […]
தனது 22 வயது காதலியைக் கத்தியால் குத்திவிட்டு, பணம் மற்றும் நகைகளுடன் காதலன் தப்பிச் சென்றதாக கௌசாம்பியின் சராய் அகில் காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர். அம்வா கிராமத்தில் வசிப்பவர்கள் நேற்று காலை வயல்வெளியில் ஒரு பெண் காயமடைந்து ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்தப் பெண்ணுக்கு பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், அருகில் கத்தி ஒன்றும் காணப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவரது பையில் இருந்த ஆவணங்களின்படி, அந்த பெண் அதே […]
பாதாள உலக தாதா தாவூத் இப்ராகிமின் இருப்பிடம் ரகசியமானது. ஜூன் 2021 இல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் இக்பால் கஸ்கர், தாவூத், சோட்டா ஷகீல் மற்றும் அனீஸ் இப்ராமி ஆகியோர் பாகிஸ்தானில் வசிப்பதாக ஒப்புக்கொண்டபோது தாவூத்தின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட்டது. ஜாவேத் பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தியதாகவும், அதற்காக சிறையில் இருந்ததாகவும் அவர் என்சிபியிடம் தெரிவித்தார். கடந்த மாதம், ஆகஸ்ட் 4ம் தேதி, சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளியான இக்பால் குரேஷியை, தேசிய புலனாய்வு அமைப்பு […]
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கரிம்பா கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 90 வயது முதியவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த உத்தரவை உறுதி செய்த சிறப்பு அரசு வக்கீல் நிஷா விஜயகுமார், குழந்தைகளை […]
சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், 2019ல் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்மீனாம்பிகை நிதி முறைகேடு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஐபிஎஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்ததார். விஜய்குமாருக்கு எதிரான ஆதாரங்களை மனித உரிமை ஆணையம் கேட்டது, அதை இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக் குழு முன்வைத்த கேள்விகளுக்கு அவளிடம் […]
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) கண்காணித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் நாட்டில் ‘ஹிட் அண்ட் ரன்’ பிரிவின் கீழ் மொத்தம் 52,448 சாலை விபத்துகள் நடந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற விபத்துகள் அதிகபட்சமாக எப்படி நடந்தன என்பதை MoRTH தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுப் பகுப்பாய்வைப் பகிர்ந்துள்ளது. மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், […]
மத்திய பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி பணத்திற்காக தனது 59 வயது தந்தையை கொலை செய்ததாக அங்கித் (32), அவரது நண்பர் நிதின் லோதி மற்றும் பீகாரைச் சேர்ந்த கொலையாளி அஜித் சிங் ஆகிய 3 பேரை கைது செய்ததாக இன்று போலீசார் தெரிவித்தனர். மகேஷ் குப்தா(59), ஜூலை 21-22 இடைப்பட்ட இரவில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள பிச்சோர் நகரில் உள்ள தனது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் […]
உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் 33 வயது நபர் தனது ஐந்து வயது மருமகள் சாப்பிடும் நேரத்தில் மாம்பழம் கேட்டு அடம்பிடித்ததால் அவளைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர். பலமுறை மாம்பழம் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், முதலில் தடியால் தலையில் அடித்ததாகவும், ரத்தம் வர ஆரம்பித்ததும், பீதியடைந்து, கழுத்தை அறுத்ததாகவும், பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் அடைத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். ஷாம்லியின் கெரா குர்தான் கிராமத்தில் கடந்த […]
அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட முதல் இன்சைடர் டிரேடிங் வழக்கில் இரண்டு இந்திய சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் காயின்பேஸ் இன் முன்னாள் தயாரிப்பு மேலாளர் இஷான் வாஹி மற்றும் நிகில் வாஹி – கடந்த வியாழன் காலை சியாட்டிலில் கைது செய்யப்பட்டனர். அறிக்கையின்படி, காயின்பேஸ் நிறுவனம் தன் பரிமாற்றத்தின் மூலம் மக்களை கிரிப்டோ வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. இஷான் வாஹி தனது சகோதரர் மற்றும் நண்பர் ரமணிக்கு புதிய கிரிப்டோகரன்சி பற்றி […]
தூக்கி எறியப்பட்ட காபி கோப்பையிலிருந்து டிஎன்ஏவை மீட்டனர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு பென்சில்வேனியாவில் 19 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 46 ஆண்டுகளுக்கு முன்பு, டிச. 5, 1975 அன்று, லிண்டி சூ பீச்லரின் (19 வயது) அத்தை மற்றும் மாமா, இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக மளிகைப் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பிய அவர்களது மருமகளை காண மேனர் டவுன்ஷிப்பில் உள்ள அவரது அடுக்குமாடி […]
ஹைட்டியில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறை இறப்பு எண்ணிக்கை மற்றும் உரிமை மீறல்கள் -ஐநா மனித உரிமைகள் அலுவலகம் . ஐக்கிய நாடுகள் சட்டசபை கூட்டத்தில்-ஹைட்டியின் தலைநகரைச் சுற்றி அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் அலுவலகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. அப்போது, சிட் சோலைல் மாவட்டத்தில் மட்டும் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் 99 பேர் கொல்லப்பட்டதற்காக கவலை தெரிவித்தது. கும்பல் வன்முறை மற்றும் கிரிமினல்களை ஆதரிக்கும் எவருக்கும் சிறிய ஆயுதங்கள் […]
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. முந்த்ரா துறைமுகத்தில் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை(ஏடிஎஸ்) சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) நடத்திய கூட்டு சோதனையின் போது ₹350 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக துணி ரோல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கடத்தல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருந்து அனுப்பப்பட்டு பஞ்சாபிற்கு கொண்டு செல்லப்பட்டது என்று குஜராத் […]