இன்றைய ராசி பலன்கள் இதோ...!

மேஷம் : பணம் ஏதும் கொடுத்துவைத்திருந்தால் வந்து சேந்துடும். நண்பர்களால் திடீரென்று நல்லது நடைபெறும். அதனால் இன்று லாபம் கிடைக்கும். நல்ல வழி காட்டியவர்களை

மேஷம்: பணம் ஏதும் கொடுத்துவைத்திருந்தால் வந்து சேந்துடும். நண்பர்களால் திடீரென்று நல்லது நடைபெறும். அதனால் இன்று லாபம் கிடைக்கும். நல்ல வழி காட்டியவர்களை பார்த்து மகிழக்கூடிய சூழல் உருவாகும்.  குடும்ப பிரச்சனை குறையும் நாள் இன்று.

ரிஷபம்: அருகாமையில் இருப்பவர்கள் மூலம் தான் தொல்லைகள் வந்து சேரும் பார்த்து கவனமாய் இருங்கள்.  நீங்கள் கவனமாய் இருந்தாலும் பிரச்சனை வீடு தேடி வரும் நாள் தான் இன்று. ஆதலால் கவனம் மிக கவனம். இடம்மாறி சென்றுவிடலாம் என்று கூட தோன்றும் பொறுமையாய் சிந்தித்து செயல்படுங்கள்.

மிதுனம்: இன்று உங்களுக்கு சுதந்திரம் கிடையாது. சிந்தித்து செல்படுங்கள்.  யாருடனும் வாக்குவாதத்திற்கு செல்லாதீர்கள். பொறுமையாக செயல்படுங்கள். வெளியில் எங்கும் செல்லாமல் இருப்பது நல்லது.

கடகம்: வண்டியை கவனமாக கையாளுங்கள். இன்று உங்கள் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் தருணம் உருவாகலாம்.  உங்களை காக்க வைத்த காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.

சிம்மம்: ஆரோக்கியமான நாள். திருப்திகரமாக பணம் வந்து சேரும் நாள். தொழில் தொடங்க நண்பர்கள் உதவும் நாள்.

கன்னி: சமாதானமான நாள்.கொடுத்து வாங்குவது இன்று ஒழுங்காக நடைபெறும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்: கடன் சுமை குறையும். விருப்பப்பட்ட ஆடம்பர பொருட்கள் வந்துசேரும்.  சொத்து வில்லங்கம்  அகலும்.

விருச்சிகம்: என்ன சொன்னாலும் நல்லது தான் நாடக்கும் ( அதற்காக யாரையும் வம்பிழுத்தால் நிர்வாகம் பொறுப்பல்ல ) ஆன்மீகத்தில் நம்பிக்கை உண்டாகும். பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டிருந்தால் அது இன்று சமாதானத்தில் முடியும்.

தனுசு: குடும்பத்தில் நல்லது நடக்கும் அல்லது நல்லது நடப்பதற்காக நல்ல பேச்சுக்கள் உருவாகும். வாகனத்தை மாற்ற எண்ணம் தோன்றும். உங்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.

மகரம்: எண்ணிவை செவ்வனே நடைபெறும் நாள். இன்றைய பணிகள் சிறப்பாக நடைபெறும். வியாபர போட்டிகள் அகலும்.

கும்பம்: நேற்று வந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வரும். உங்கள் உடன் பிறப்புகளினால் நல்லது நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

மீனம்: தன வரவு திருப்தி அளிக்கக்கூடிய நாள்.  குடும்பத்தில் நல்லது நடைபெறுவதற்கான அறிகுறிகள் வந்து சேரும் நாள்.  உங்களிடம் மாற்று கருத்துடைவோர் மனம் மாறுவர்.