சென்னைக்கு அடுத்த ஆவடியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கையில், முன்னள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் என கன்றியப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
unknown nodeஅந்த குழந்தையின் உடலை மறைக்க உதவிய குற்றத்திற்காக மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜம்மாள் கைது செய்யப்பட்டார். . இதனால் இவர்கள் இருவரும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார்.