#Breaking:தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

#Breaking: 5 days of rain in Tamil Nadu - Chennai Meteorological Department!

சென்னை:தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி,தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள்,ராணிப்பேட்டை,வேலூர், காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர்,திருப்பத்தூர்,திருவண்ணாமலை, அரியலூர்,திருச்சி, சிவகங்கை,மதுரை,விருதுநகர்,தேனி,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,மேலும்,நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.