ரூ.35 கோடியில் வேளாண் பசுமை பூங்கா – தமிழக அரசு திட்டம்!

Government of Tamil Nadu plans to set up an agricultural green park at an estimated cost of Rs 35 crore on 6.4 acres in Kindi.

கிண்டியில் 6.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டம்.

சென்னை கிண்டியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை பசுமை பூங்கா அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கிண்டியில் 6.4 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பசுமை பூங்கா அமைக்கும் பணியை மார்ச் மாதம் பணிகளை முடிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நறுமண தாவரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அமைக்கப்படவுள்ளன என்றும் பொதுமக்களை கவரும் வகையில் ரூ.15 கோடி செலவில் வண்ணத்துப்பூச்சி பூச்சி பூங்கா அமைக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.