#Breaking:100 கோடி ரூபாய் ஊழலா? – மதுரை சிறை வழக்கு வாபஸ்!

The case filed in the Chennai High Court alleging corruption of Rs 100 crore in Madurai jail has been withdrawn.

சென்னை:100 கோடி ரூபாய் அளவுக்கு மதுரை சிறையில் ஊழல் நடந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மதுரை சிறையில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,மதுரை சிறை வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.போதிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடரக்கூடாது என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியதால்,வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

மேலும்,மனுவை திரும்பப் பெற்று உரிய ஆதாரங்களுடன் புதிதாக வழக்கு தொடரவும் மனுதாரரான வழக்கறிஞர் புகழேந்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.