#Breaking:அலர்ட்...8 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

The Chennai Meteorological Department has forecast heavy rains in eight northern districts of Tamil Nadu, including Chennai.

தமிழகத்தில் சென்னை  உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன்னதாக தெரிவித்தது.

மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில்,சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்,ராணிபேட்டை,விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அந்த வகையில்,டெல்டா மாவட்டங்களான கள்ளக்குறிச்சி,வேலூர்,திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம்,காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து,நவம்பர் 12 ஆம் தேதிக்கு பிறகு இன்று மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.