வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சி....!

The incident of attempting to cut the window bars of the South Indian Bank in Kanchipuram district has caused a great stir.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் அந்த வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மணிமங்கலம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது இரண்டு ஜன்னல்களின் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது வங்கியிலிருந்து பணம் எதுவும் கொள்ளை அடிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த வங்கி ஜன்னலை அறுத்து, வாங்கி மேலாளரின் லாக்கரை உடைத்த பொழுது அங்கிருந்த அலாரம் ஒலித்ததால் உள்ளே வந்த மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வங்கிக்கு இரவு நேர காவலர்கள் யாரும் இல்லாததால் தான் இந்த கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது என கூறப்பட்டுள்ளது.