திருப்பூர்,தமிழக சட்டபேரவை உறுதிமொழி ஆய்வுக்குழுவினர் திருப்பூரில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வியாழனன்று ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டபேரவை உறுதிமொழி ஆய்வுக்குழுவின் தலைவர் ஐ.எஸ். இன்பத்துரை தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின் உறுதிமொழி ஆய்வுக்குழுவினர் வியாழனன்று மாவட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான மேம்பாலங்கள், சிக்கண்ணா கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தை பார்வையிட்ட உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் மேம்்பாலத்தின் இடதுபுறம் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டனர்.
DINASUVADU