டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடிய ஆம் ஆத்மிக்கு இந்த முறை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ஆட்சியை இழக்கும் […]
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. கடந்த 2 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி தற்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி எதிர்நோக்கியது. ஆனால், தற்போது வரையில் வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் சுமார் […]
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் செயல்முறைக்காக பயிற்சி பெற்ற துணை ஊழியர்கள் உட்பட 5,000 பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், அதன் பின் 30 […]
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மற்ற வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. அதிமுக, பாஜக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேச்சைகள் என 46 பேர் களத்தில் உள்ளனர். 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தைச் […]
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18 பகுதியில் VVIPக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் முழுவதும் தீக்கிரையாகின. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், பக்தர்கள் யாரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக பக்தர்கள் இருந்த கூடாரத்தில் தீ பற்றிருக்கலாம் என்று முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திடீரென தீ விபத்து […]
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான முடிவு Zomatoவின் வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Zomato Ltd இனிமேல் Eternal Ltd என்று அழைக்கப்படும். அதன்படி, Zomato, Blinkit மற்றும் Hyperpure போன்ற அதன் வணிகங்களை ‘Eternal Limited’ என்ற பெயரில் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இந்த தகவலை அந்த நிறுவனம் மும்பை பங்குச் […]
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக UGC பரிந்துரைப்பவரும், மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, யூ.ஜி.சி புதிய விதியை கொண்டுவந்துள்ளது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் யுஜிசி புதிய நெறிமுறைகள் திரும்பபெறவேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் […]
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. காலையில் 7 மணிக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதனையடுத்து, 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. இன்னும் ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டும் மக்கள் வாக்குகளை […]
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும் திரிவேணி சங்கமம் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வும் மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரையில் 45 நாட்கள் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். விஐபிகளுக்கும், […]
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. […]
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், பாஜக எம்.பி. ஹேம மாலினி கும்பமேளா கூட்ட நெரிசலில் நடந்த உயிரிழப்புகளை குறித்தும், இது அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் […]
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 31-ல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதனை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்தார். அடுத்ததாக திமுக, காங்கிரஸ் என ஒவ்வொரு கட்சி சார்பாகவும் அக்கட்சி தலைவர்கள் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து வந்தனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவர் […]
உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், ரயிலின் பாதுகாப்பு பெட்டியும், என்ஜினும் தடம் புரண்டுள்ளன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பிரயாக்ராஜில் இருந்து ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் […]
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால், மழலையின் இந்த அப்பாவி கோரிக்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. அங்கன்வாடியில் பேசிய அந்த குழந்தையின் வீடியோ அம்மாநில அரசின் கண் முன்பே சென்றடைந்துள்ளது. அட ஆமாங்க… கேரள மாநில சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட் உரை மீதான தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ள நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தனது கருத்துக்களை பதிவு செய்தார். அவர் பேசுகையில், ” மத்திய அரசும் மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் உத்திர பிரதேச […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று திங்கள் கிழமை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில விஷயங்களை குற்றம் சாட்டி வெளிப்படையாகவே பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே […]
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில் தனது 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவியது. கடந்த 29ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. தற்பொழுது, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல்கள் உள்ளன, இதன் காரணமாக முழு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது […]
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் என பல அறிவிக்கப்பட்டது. ஆனால், தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. தென் மாநிலங்கலான தமிழகமும் கேரளாவும் கடுமையாக தங்களது விமர்சனங்களை முன் வைத்துள்ளது. மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டை பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து […]
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு பாஜக மற்றும் பாஜக ஆதரவுவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் பட்ஜெட் உரை தொடங்கும் முன்னரே வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பட்ஜெட் 2025-ல் பலரும் எதிர்பார்த்த வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சம் வரையில் உயரத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாத வருமானம் ரூ.1 […]