டெல்லி : நேற்று (பிப்ரவரி 15) இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள்அடங்குவார்கள். இந்த நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு சென்றவர்கள் என முதற்கட்டமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஏற முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்த நிகழ்வை […]
உத்தரப் பிரதேசம்: வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்த கொண்டனர். அப்பொழுது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், “நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே […]
பிரயாக்ராஜ் : உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பக்தர்களின் பொலேரோ விபத்துக்குள்ளானது. ஒரு பொலேரோவும் பேருந்தும் மோதியதில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர், 19 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்படி, நேற்று இரவு மேஜாவில் உள்ள பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான சாலை விபத்து நடந்தது. பக்தர்கள் நிரம்பிய ஒரு பொலேரோவும் ஒரு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பொலேரோவில் பயணம் செய்த 10 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே […]
புதுச்சேரி : புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி, தனக்கு உடல்நிலை சரியில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்ற பிறகே சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அப்பகுதி ஊர்மக்கள் நேற்று (பிப்ரவரி 14) மாலை திரளாக தனியார் பள்ளிக்கு சென்று அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும், […]
பஞ்சாப் : அமெரிக்காவில் சட்டவிரோத இந்திய குடியேறிகள் பஞ்சாபில் தரையிறங்குவது தொடர்பான அமெரிக்க இராணுவத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 119 இந்திய குடியேறிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு விமானங்கள் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தகவல்களின்படி, 119 இந்திய குடியேறிகளில் பஞ்சாபிலிருந்து 67 […]
டெல்லி : நேற்று மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து விவாதித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வந்தார். இதில் பேசிய நிர்மலா சீதாராம ஆவேசமாக,” நான் பதில் சொல்வேன். அதனை கேட்க வேண்டியது உங்கள் கடமை.” எனக் கூறினார். நிர்மலா சீதாராமன் : மேலும், ” ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து இருந்தது திமுக. அப்போது அதனை பற்றி […]
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு நாள் ஆன்மிக சுற்றுபயணத்தை இன்று துவங்கினார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை கும்பகோணம் சுவாமிமலை மற்றும் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்களை நேரில் சென்று தரிசனம் செய்தார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கும் அவருக்கு கோவில் சார்பில் பூரணகும்ப […]
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5 நாள்களான நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜகவால் இதுவரை முடிவெடுக்க முடியவில்லை. 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற கெடுவும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சக அறிவித்துள்ளது. முன்னதாக, மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பிரேன் சிங் பிப்.9ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது […]
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி கட்டண முறையை எளிமைப்படுத்தி, மக்களுக்கு அதிக நன்மை வழங்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக வும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மொத்தம் 23 அத்தியாயங்களும், 16 அட்டவணைகளும் இடம் பெற்றுள்ளன. வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், குறைந்த வருமானம் உடையோருக்கு அதிக சலுகைகள் வழங்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த புதிய மசோதா […]
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது பாரிஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் அந்த மாநாட்டை தலைமை தாங்கி உரையாற்றினார். அதன் பிறகு பிரான்ஸ் அதிபருடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) அமெரிக்கா வாஷிங்டன் சென்ற பிரதமர் […]
ஜம்மு : ஜம்மு & காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறல்களுக்கு முயற்சித்துள்ளது. இதை எதிர்த்து இந்திய இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து, எதிரி தரப்பில் “பெரும் உயிரிழப்புகள்” ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வீரர்கள் வீரமரணம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LOC) அருகே, […]
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, முன்னர் அறிவித்ததை விட சில வாரங்களுக்கு முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளது. ஆம், கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா […]
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சார் வாழ்த்து தெரிவித்து அம்மாநிலத்தில் பெண்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு ஒன்று பற்றியும் கூறினார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுபற்றி பதிவிடுகையில், ” ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்காக, “வீட்டிலிருந்து வேலை செய்யும் Work From Home ” திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டார். மேலும் […]
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதையொட்டி, ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் […]
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் பிரதான ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 2011 மே மாதம் முதல் , 2016, 2021 என மூன்று சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ். 3வது முறையாக முதலமைச்சர் பதவியில் தொடரும் மம்தா […]
ரேவா : மத்தியப் பிரதேசத்தில் தன் உறவினரின் சங்கீத் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பரிநீதா (23) என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்தப் பெண் நடனமாடிக்கொண்டே இருக்கும் பொழுது, கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பளபளப்பான லெஹங்கா அணிந்த அந்த பெண், மேடையில் நடனமாடுவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். நடனமாடும்போது திடீரென்று அவள் மேடையில் விழுகிறாள், அதன் பின் எழுந்திருக்கவில்லை. இதை பார்க்கும் பொழுது, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத […]
இம்பால் : கடந்த மே 2023 முதலே மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அங்கு 2017-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சராக பைரன் சிங் பொறுப்பில் இருந்து வந்தார். இரு பிரிவினர் இடையே மோதல், உயிரிழப்புகள் என தொடர் சர்ச்சைகளை பைரன் சிங் ஆட்சிக்கு எதிர்கொண்டு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவு : இப்படியான சூழலில் கலவரத்தை தூண்டும் […]
டெல்லி : 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று ரிசல்ட் நேற்று (பிப்ரவரி 8) வெளியானது. 2013, 2015, 2020 என்ற 3 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே […]
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கியதில் இருந்தே ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டது. எனவே, பாஜக வெற்றி வாகை சூடிவிட்டது என முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இறுதியாக, 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியை கைப்பற்றியுள்ளது. […]
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட பாஜக வெற்றியை பதிவு செய்துவிட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி […]