நாம் இன்று நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து மேலை நாட்டு உணவுகளை தான் உண்ணுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியாக இருந்தாலும், உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளை தான் ஏற்படுத்துகிறது.
நாம் நமது உணவுகள் அனைத்திலுமே அதிகமாக செரிமானத்தை அதிகரிக்க கூடிய பூண்டு, இஞ்சி போன்றவற்றை சேர்க்கிறோம். இதனால் நமது உடலில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல், உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
unknown nodeஆனால், நம்மில் சில இஞ்சி மற்றும் பூண்டு போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதுண்டு. ஆனால் அதை நாம் நமது உடலுக்கு நல்லது என்று நினைக்கிறோம். அது முற்றிலும் தவறானது. அவ்வாறு சாப்பிடும் போது, அதில் உள்ள அமிலங்கள் நேரடியாக வயிற்றிற்குள் சென்று பல விதமான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே அப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.