இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தூக்கம் வருவதில்லை அப்படி வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். மேலும் காலையில் எழுந்து சில விஷயங்களை செய்து பலவிதமான பாதிப்புகளை வாங்கிக் கொள்கின்றன.
unknown nodeநம் நம்மில் பலர் காலையில் வேலைகளை இருட்டிலே செய்கிறோம். இதுபோன்று வேலையை இருட்டில் செய்தால் மெலட்டோனின் ஹார்மோன் வெளியிட்டு மேலும் தூக்கத்தை தரும் அத்துடன் நாள்முழுவதும் சோர்வையும் , அவசரத்தையும் தரும்.
unknown nodeஅலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பலருக்கு இந்த மோசமான பழக்கம் உள்ளது. காலையில் எழுந்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு மெயிலை திறப்பார்கள். அதில் வந்திருக்கும் மெயிலை ஒவ்வொன்றையும் பார்ப்பார்கள் இதுபோன்ற செய்தால் மனநிலை மாறி காலையிலே தலைவலி ஏற்படும்.
unknown nodeகாலை எழுந்தவுடன் பல் விளக்காமல் பலர் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானக் கோளாறு ஏற்படும். மேலும் பற்சிதைவை ஏற்படுத்தும்.இப்போது உள்ள பலருக்கும் இந்த பழக்கம் கண்டிப்பாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் அவர்களின் கை முதலில் செல்போனை தான் தேடும் இப்படித் தூங்கி எழுந்தவுடன் செல்போன் பயன்படுத்துவதால் கண் , மூளை , மனநிலை போன்றவை பாதிக்கும்.
unknown nodeநம்மில் பலர் மொபைலில் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட அலாரத்தை செட் செய்து வைத்திருப்பார்கள். இந்த காலை பழக்கத்தினால் நமக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் . குறிப்பாக உங்களது கனவுகளை அடைய விடாமல் செய்யுமாம். உங்கள் நிம்மதியும் கெடுத்துவிடும்.
unknown nodeமேலும் நீங்கள் காலையில் சாப்பிடும் உணவும் உங்களுக்கு பலவிதமான பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் உடல்நல கோளாறு ஏற்பட தொடங்கும். அதற்காக காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாது.எனவே காலையில் சீக்கிரமாக எழுந்து ஒவ்வொரு வேளையும் ஒன்றின் பின் ஒன்றாக நிதானமாக செய்தாலே போதும் மேலே சொன்ன அனைத்து அனைத்தையும் கடைபிடித்து வந்தாலே உங்களுக்கு நிம்மதி சொந்தம்.