மதுரை

சிக்கனால் வந்த சர்ச்சை!! மன்னிப்பு கேட்ட ஹோட்டல் நிர்வாகம்

மதுரையில் வடக்கு மாசி வீதியில் இயங்கும் பிரபல அசைவ ஹோட்டலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, மக்களை கவரும் வகையில், புதிய விளம்பரம் ஒன்றை அந்த ஹோட்டல் நிறுவனம் வெளியிட்டது. அதில் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்று கூறிப்பிடப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமண சங்க நிர்வாகிகள், அந்த உணவகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த உணவகம் தரப்பில் மன்னிப்பு கடிதம் கொடுப்பதாக கூறினர். இந்நிலையில், அவர்கள் களைந்து சென்றனர்.

#hotel 2 Min Read
Default Image

மக்களே உஷார்: உங்கள் வீட்டின் சுவரில் இந்த குறியீடு இருந்தால் ஜாக்கிரதை!

சமீப காலமாக தமிழகத்தில் கொலை , கொள்ளை போன்ற  சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் கொள்ளை சம்பவங்கள் மிக நூதனமான முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரையில் ஒரு  கொள்ளை கும்பல் இரு குழுக்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நோக்கமே ஆள் இருக்கும் வீடு ,  இல்லாத வீடு என கண்டுபிடித்து. ஆள் இல்லாத வீட்டில் இந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்து வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் ஒரு குழு மக்கள் தொகை கணக்கெடுப்பு  என்ற […]

Madurai Police 6 Min Read
Default Image

மனைவி இறந்த சோகத்தில் மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர்!

மதுரையில் உள்ள எஸ்.எஸ் காலனி பார்தசாரதி தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் ஆவார்.இவரது மனைவி பாரதி.இவர் ஒரு மாற்று திறனாளி ஆவார்.இவர்களுக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாததால் பாரதி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உயிரிழந்துள்ளார்.இதனால் மனமுடைந்த கார்த்திக்கேயன், மனநலம் பாதித்த தன் மகனை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ […]

news 3 Min Read
Default Image

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை – ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

இந்த வருடம் ஆடி அமாவாசை வருகிற புதன் கிழமை வரவுள்ளது. வருடாவருடம் இந்நாளில் இந்துக்கள் தங்களது முன்னோர்களை வணங்கும் பொருட்டு, ராமேஸ்வரதிற்கு வந்து வழிபட்டு செல்வர். அங்கு மக்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் 31 ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் அதே போல ராமேஸ்வரத்திலிருந்து  மதுரைக்கு அதே நாளில் மலை 4.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.  

#Madurai 2 Min Read
Default Image

மகன் கண் முன்னே துடித்து உயிரிழந்த தாய்!திடுக்கிடும் தகவல்!

மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி ஆவார்.இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.அவர் தான் தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் மதுரா கல்லூரி அருகே சென்றபோது செல்லமணி என்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது பேருந்து,இருசக்கர வாகனத்தின் மீது […]

#Accident 4 Min Read
Default Image

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மீன் விற்பனை !

மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் மீன் விற்பனை செய்யும் ஒருவர் மருத்துவமனையில் உள்ள மேல் தளத்தில் மீன்கள் எடுத்து செல்லும் காட்சி வெளியானது. இந்நிலையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்து செல்வதாக உள்ள சாய்தளத்தில் மீன் வியாபாரி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.இதனால் மருத்துவமனையில் மேன் விற்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இதை தெடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் […]

#Madurai 2 Min Read
Default Image

லட்டு தயாரிக்க திருப்பதிக்கு மதுரையிலிருந்து மாதத்திற்கு 30 டன் நெய் !

ஆந்திராவில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பிரசாதமாக  லட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த பிரசாத லட்டுகளை தயாரிப்பதற்கான நெய்யை மதுரை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது. இது குறித்து மதுரை ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஓ .ராஜா கூறுகையில் ,திருப்பதி ஏழுமலையான் கருவறை மற்றும் லட்டு தயார் செய்ய 6 மாதத்திற்கு நெய் விநியோகம் செய்யும் டெண்டரை மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது,. அதன் படி […]

#Aavin 2 Min Read
Default Image

சரக்கு அடிக்க காசு கேட்டதால் மகனென்று பாராமல் உயிரோடு கொளுத்திய தாய்!

மதுரையில் உள்ள ஒத்தக்கடை அருகேயுள்ள காளியப்பன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி ஆவார்.இவரது மனைவி சரோஜா இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இதில் மூத்த மகன் அஜித்குமார் ஆவார். இவர் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார்.மேலும் அஜித் குமார் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்தும் கஞ்சா ,மது என போதையில் வந்து தகராறு செய்வதையும் வழக்கமாக கொண்டு வந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றிவரும் அஜித்குமார் ,கூலி வேலை பார்த்துவரும் தனது தாயார் சரோஜாவிடம் மது குடிக்க காசு கேட்டு […]

tamilnews 4 Min Read
Default Image

மதுரையில் பள்ளி ஆசிரியை வகுப்பறையிலேயே குத்தி கொலை! கணவர் வெறிச்செயல்!

மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் ரதிதேவி. இவருக்கும் அவரது கணவர்குருமுனீஸ்வரன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்து பாடம் எடுத்துள்ளார் ஆசிரியை ரதி தேவி. பள்ளி வகுப்பறையில் ரதி தேவி இருப்பதை தெரிந்து கொண்டு வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இந்த வாக்குவாதம் முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே […]

#Madurai 2 Min Read
Default Image

மதுரையில் பயங்கரம்! கர்ப்பிணி பெண்ணிற்கு சரமாரியாக அரிவாள் வெட்டு! கணவர் மற்றும் நண்பர்கள் கைது!

மதுரை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதன் பெயரில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மதுரை, உசிலமபட்டியில் உள்ள செக்கானுராணி எனும் பகுதியினை சேர்ந்த அம்சத் என்பவர் தனது முதல் கணவர் வடிவேலுவை பிரிந்து மதன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் மதனும், அம்சத்தும் வீட்டில் இருந்த போது திடீரென ஒரு கும்பல் […]

#Madurai 2 Min Read
Default Image

கொலைக்கு கொலை பழிக்கு பழி வாங்கிய தம்பி!திடுக்கிடும் தகவல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவியுடன் சேர்ந்து மதுரையில் உள்ள அறியமங்கலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது இவருக்கும் எருமைகுளத்தை சேர்ந்த வழிவிட்டான் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன்,வழிவிட்டானை கீரத்துறை பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து தமது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்ததால் தமது சொந்த ஊரான கமுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தனது அண்ணன் வழிவிட்டானை கொலை செய்த […]

tamilnews 4 Min Read
Default Image

மதுரையில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இரன்டு குழந்தைகளுக்கு தாயான கொடுமை!

மதுரையை சேர்ந்த வசந்தி என்பவர் தனது கணவர் இல்லாததால் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வசித்துத் வந்த வீட்டிற்கு அருகில் இருந்த விஜயகுமார் என்பவர் வசந்தியின் மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டி அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் தாய் வசந்திக்கு தெரிந்தே நடந்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. பிறந்த ஆண் குழந்தையை வசந்தி விலைக்கு விற்று விட்டதாகவும், அதன் பிறகு சிறுமி பியூட்டி பார்லரில் […]

#Madurai 3 Min Read
Default Image

மாணவியின் மீது ஆசிட் வீசிய இளைஞன்!மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிய மாணவியின் குடும்பம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே உள்ள பூலாம்பட்டியில் உதயசூரியன் என்பவர் வசித்து வருகிறார்.இவர் டெய்லர் வேலை பார்த்து வருகிறார்.இவரது மகள் மீனா.இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக அவரது மகள் படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது பள்ளி படிப்பை படித்து முடித்துள்ளார்.பின்னர் திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை ஆங்கில பிரிவில் படிக்க சென்றுள்ளார். கல்லூரில் சேர்ந்த சில நாட்களிலே அவரது தந்தை காலமாகியுள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் […]

tamilnews 4 Min Read
Default Image

மயக்க மருந்து கொடுத்து பெண் காவல்துறை அதிகாரியை கற்பழித்த சாமியார்!திடுக்கிடும் தகவல்!

மதுரையில் உள்ள தல்லாக்குளம் பகுதியில் பெண் காவல் துறை அதிகாரியாக பணிபுரிபவர் எஸ்.சந்தானலட்சுமி.இவரது சொந்த ஊர் மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம். கடந்த 2007 -ம் ஆண்டு இவருக்கும் சீனிவாச பெருமாள் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 29 வயதான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்து வைப்பதாக […]

tamilnews 6 Min Read
Default Image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – திட்ட அறிக்கையை உங்க அரசு இன்னும் சமர்பிக்கல..!அம்பலமான தகவல்

மதுரை மாவட்டம் கே .புதுப்பட்டியில் 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது அதன் படி  பிரதமர் மோடி மதுரை வந்து அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில்மதுரை-கே .புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான தமிழக அரசு சமர்பித்துள்ள திட்ட அறிக்கை குறித்து மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு மனு ஒன்றை அளித்து இருந்தார். இந்த மனு குறித்து விபரம் அளித்துள்ளது […]

அரசியல் 2 Min Read
Default Image

மதுரை : செக்கானூரணி கட்டட விபத்து காரணம் உரிமையாளர் மாதவன்.!கைது செய்த காவல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து 9  தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.இந்நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மிட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எஞ்சிய 3 பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் தற்போது  போராடி வருகின்றனர் இந்நிலையில்  மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காசிநாதன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார்.கட்டட இடிபாடுகளில் சிக்கிய 9 பேரில் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்  மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. இந்த கட்டம் தொடர்ப்பாக  […]

செய்திகள் 3 Min Read
Default Image

மதுரை : திருமங்கலம் அருகே 3 மாடி கட்ட‌டம் இடிந்து விபத்து

மதுரை  மாவட்டம் திருமங்கலம் அருகே 3 மாடி கட்ட‌டம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து 7 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.இந்நிலையில் 2பேர் படுகாயங்களுடன் மிட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எஞ்சிய 5பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் தற்போது  போராடி வருகின்றனர்

செய்திகள் 1 Min Read
Default Image

கோவிலில் உள்ள குளியலறையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த அதிகாரி!

மதுரையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருப்பவர் பச்சையப்பன்.இவர் பல்வேறு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். அதே வழியில் கடந்த ஜூன் 28-ம் தேதி பேரையூரை அடுத்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை என்னும் பணிக்காக பெண் உதவி ஆணையா் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வேலையை முடித்தவுடன் அந்த கோவிலில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார்.அப்போது இணை ஆணையர் பச்சையப்பன் அவர் பொருத்தி வைத்திருந்த ரகசிய கேமராவாலும்,அவர் கையில் வைத்திருந்த செல்போன் கேமராவாலும் அவரை வீடியோ […]

tamilnews 2 Min Read
Default Image

மதுரை காமராசர் பல்கலை. மாணவர் சேர்க்கையில் முறைகேடு..! தோள் உரிக்கும் வைகோ..!

மதுரை காமராசர் பல்கலை. மாணவர் சேர்க்கையில் முறைகேடு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் மதுரை காமராசர் பல்கலை கழகத்தில்  2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ளது அதில் மோசடி நடைபெற்றுள்ளது இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.மேலும் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து, உரிய தகுதி உடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அரசியல் 2 Min Read
Default Image

எய்ம்ஸ் அமைய உள்ள 224 ஏக்கர் நிலத்தை சுற்றி ரூ.15 கோடியில் தடுப்பு சுவர் அமைக்க ஒப்பந்தம்

கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினர்.அடிக்கல் நட்டு ஆறு மாதம் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்க்கான எந்த வேலையும் நடைபெற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதில்,மருத்துவமனை கட்ட மாநில அரசானது எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அதனால் தாமதமாகிறது என்ற தகவலை மத்திய அரசு கூறியது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு நேரில் […]

#Chennai 3 Min Read
Default Image