மதுரை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதன் பெயரில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை, உசிலமபட்டியில் உள்ள செக்கானுராணி எனும் பகுதியினை சேர்ந்த அம்சத் என்பவர் தனது முதல் கணவர் வடிவேலுவை பிரிந்து மதன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகிறது.
unknown nodeஇந்நிலையில் மதனும், அம்சத்தும் வீட்டில் இருந்த போது திடீரென ஒரு கும்பல் வீடு புகுந்து அம்சத்தை சரமாரியாக வெட்டி உள்ளனர். தடுக்க வந்த மதனையும் தாக்கியுள்ளனர். இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே பலியானார். மதன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இது தொடர்பாக முதல் கணவர்வடிவேலு மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.