ஆகஸ்ட் ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத லாக்டவுன்
தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்கிற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். இந்நிலையில் ஆகஸ்ட் ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்று முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்.