மகாராஷ்டிரா : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 149 பேர் உயிரிழப்பு…!

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 149 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காணாமல் போயுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல இடங்களில் இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் பெய்து வரக்கூடிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும், 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025