சூர்யா பிறந்த நாளுக்கு பேனர் வைத்த 2 இளைஞர்கள்! மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெரும் சோகம்.!

suriya sad

இன்று நடிகர் சூர்யா இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவர்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்த தானம் செய்வது, அன்னதானம் வழங்குவது, போஸ்ட்டர்கள் வைப்பது என கோலாகலாமாக பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாளான இன்று துயரமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அது என்னவென்றால், ஆந்திராவை சேர்ந்த இரண்டு சூர்யா ரசிகர்கள் இன்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு, கட்டவுட் வைத்த போது கட்டவுட் மீது  மின்சாரம் கம்பி உரசியதில் அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் சாய் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதால் அவர்களுடைய குடும்பம் மிகவும் சோகத்தில் உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயம் அடைந்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்