மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து 3 நாட்களான குழந்தை இறப்பு.!

Published by
Ragi

கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்த சில மணி நேரங்களில் பிறந்து 3 நாளான குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் அகர்டலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, பெண்ணிற்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க ஆகஸ்ட் 12-ஆம் தேதி குழந்தையின் மூக்கில் டியூப் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கேள்வி எழுப்ப, மருத்துவர்களோ குழந்தை நலமுடன் உள்ளதாக கூறியுள்ளனர்.

அதனையடுத்த சில மணி நேரங்களில் குழந்தை உயிரிழந்ததை அடுத்து பெற்றோர்கள் குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்று விட்டு குணமடைந்து வீடு திரும்பிய பெண் தனது குழந்தையின் மரணம் குறித்த விசாரணையை போலீசாரிடம் கேட்க விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர். கொரோனா பரிசோதனைக்காக அலட்சியமாக செயல்பட்டு மாதிரிகள் எடுத்ததால் பிறந்து 3 நாட்களேயான குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Published by
Ragi

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

17 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

55 minutes ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago