கேதார்நாத் யாத்திரை: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலி, 12 பேர் மாயம்!

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் யாத்திரையின் முக்கிய இடமான கௌரிகுண்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி

landslide on Kedarnath yatra

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் யாத்திரையின் முக்கிய இடமான கௌரிகுண்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12 பேர் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன நபர்களை தேடும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி, கேதார் பள்ளத்தாக்கு முழுவதும் பலத்த மழை பெய்தபோது நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்தது.

மேலும், கௌரிகுண்ட் பேருந்து நிலையம் அருகே நிலச்சரிவு கிடைத்துள்ளது, அதில் சிலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.