16 வயது சிறுமியின் தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கொன்ற 3 நபர்கள்!புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர்!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சுல்தான்னிப்பூர் பகுதியில் 16 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியை சேர்ந்த 3 நபர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த ஜூலை 8-ம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பும் போது அந்த நபர்கள் மாணவியை கிண்டல் செய்துள்ளனர்.இதன் காரணமாக அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.இதனால் அங்குள்ளவர்கள் ஓடிவரவே அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர் கூட்டம் கலைந்த பின்பு மாணவியை பின் தொடர்ந்த நபர்கள் மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.இதன் காரணமாக மீண்டும் சிறுமி சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த நபர்கள் சிறுமியை கீழே தள்ளி தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளனர்.
இதன் காரணமாக அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.பின்னர் ரெத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் எப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சை அழிக்கமுடியாது என்று கூறியுள்ளனர்.இதற்கிடையே மாணவியின் தாத்தா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.ஆனால் அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.
சம்பவம் நடந்த 3 நாடுகளுக்கு பிறகு ஜூலை 11-ம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மனதை ஓட்டில் விரிசல் விழுந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுமி கடந்த ஜூலை 14-ம் தேதி மாணவி உயிரிழந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025