கூட்டாளியாலேயே சுட்டு கொலை செய்யப்பட்ட 35 வயது நபர்!

In Uttar Pradesh, the man who shot and killed his 35-year-old accomplice due to money problem has been arrested.

உத்திர பிரதேச மாநிலத்தில், 35 வயதுடைய தனது கூட்டாளியை பண பிரச்சனை காரணமாக சுட்டு கொன்றவர் கைது.

தற்போதைய காலகட்டத்தில் பணத்திற்காகவும், சொத்திற்காகவும் உடன் பிறந்த சகோதரர்களை கொலை செய்பவர்களே அதிகரித்து விட்ட நிலையில், நண்பன் மற்றும் விதி விளக்கா என்ன? உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் கூட்டாளிகளாக சேர்ந்து பணியாற்றிய ஒருவரை மற்றவர் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

முர்ஷத்பூர் எனும் வனப்பகுதிக்கு தனது கூட்டாளி அடாய் முரத்பூரில் வசிக்கும் 35 வயதுடைய ஹேம்சந்த் என்பவரை அழைத்து சென்ற நபர் அங்கு வைத்து அவரை சுட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பண பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.