மேகாலயாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..!

இன்று மாலை மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது அதனை தெடர்ந்து மாலை 4.25 மணியளவில் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாயுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025