இந்தியாவில் 4,01,078 பேருக்கு தொற்று உறுதி….! 4,187 பேர் உயிரிழப்பு…..!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். 3,18,609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,18,92,676 ஆகவும்,குணமடைந்தோர் எண்ணிக்கை 1,79,30,960 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,38,270 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 54,000 பேருக்கும், கர்நாடகாவில் 49,000 பேருக்கும், கேரளாவில் 38,000 பேருக்கும் தொற்றுகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மே 10-ஆம் தேதி முதல் மே – 14ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.
மேலும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு காணப்படுகிறது என்றும், ஏழு மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொரோனா தொற்று காணப்படுவதாக கூறப்படுகிறது. பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக விஜயராகவன் அவர்கள் மூன்றாவது கொரோனா வைரஸ் அலையை தவிர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ள நிலையில், வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் அதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025