இந்தியாவில் ஒரே நாளில் 5,874 பேருக்கு கொரோனா..! 25 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5874 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது.
தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 5,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,171 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 5,874 ஆக குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 51,314லிருந்து 49,015 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை 5,31,508 லிருந்து 5,31,533 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,43,56,693 லிருந்து 4,43,64,841 ஆக உயர்ந்துள்ளது.