மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது!

A 65-year-old man has been arrested for raping a 13-year-old girl in Maharashtra's Walker district.

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பால்கர் எனும் மாவட்டத்தில் 13 வயதுடைய சிறுமியை 65 வயதுடைய முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட மீது மீரா எனும் 65 வயதுடைய நபரை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்த 13 வயது சிறுமி மார்ச் மாதம் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தோழிகளுடன் சென்று ஒரு வீட்டில் தங்கி இருக்கும் பொழுது அந்த வயதான நபரும் அதே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுதுதான் இந்த நபர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் முதியவரை தேடி வந்த நிலையில், வசாயின் சின்சோட்டி எனும் கிராமத்தில் உள்ள கோரத்பாடவில் அவர் பதுங்கி இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை குறித்த சிறுமியும் காவலர்களிடம் தெரிவித்ததை அடுத்து, 65 முதியவர் ஐபிசி மற்றும் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.