இன்று நாடு முழுவதும் 77வது சுதந்திர தினவிழா கோலாலமாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கு 76 கேலண்ட்ரி விருதுகளை (ராணுவ வீர விருது) வழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த 76 கேலண்ட்ரி விருதுகளில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் 4 கீர்த்தி சக்ரா விருதுகள், 11 சௌர்ய சக்கரங்கள், 52 சேனா பதக்கங்கள் , 3 நாவோ சேனா பதக்கம் (கடற்படை வீரர்கள்) மற்றும் 4 வாயு சேனா பதக்கங்கள் (விமானப்படை) ஆகியவை அடங்கும்.
பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக மரணம் அடைந்த இராணுவ நாய் மதுவுக்கு விருது , விமானப்படை வீரர்களுக்கும் விருது வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆபரேஷன் ரக்ஷக், ஆபரேஷன் பனிச்சிறுத்தை, ஆபரேஷன் கேசுவாலிட்டி இவாக்யூவேஷன், ஆபரேஷன் மவுண்ட் சோமோ, ஆபரேஷன் பாங்சாவ் பாஸ், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் ஆர்க்கிட், ஆபரேஷன் கலிஷாம் பள்ளத்தாக்கு, மீட்பு நடவடிக்கை மற்றும் ஆபரேஷன் வெளியேற்றம் ஆகிய செயல்பாடுகளுக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.
