இதுவரை சிறப்பு ரயிலில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு – ரயில்வே அமைச்சர்

சிறப்பு ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், ஷார்மிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ஏன்னென்றால், ஊடகங்களில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், இதுவரை சிறப்பு ரயிலில் பயணம் செய்த 97 பேர் இறந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் அந்தந்த மாநில காவல்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், ஷார்மிக் ரயிலில் பயணம் செய்யும்போது உணவு மற்றும் குடிநீர் கிடைக்கவில்லை என்று 113 பேர் புகார் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025