வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற 16 வயது சிறுமி!பின்னர் நடந்த விபரீதம்!

Default Image
  • கடைக்கு சென்ற சிறுமியை காரில் கடத்தி சென்ற 3 மர்ம கும்பல்.பின்னர் நடந்த வெறிச்செயல்.
  • பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்.மேலும் குற்றவாளிகளை தேடி வருகின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அமீன்பூர் நகராட்சி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமியான ரேஷ்மி ஆவார்.இவர் நேற்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள மளிகை கிடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு காரில் வந்த 3 மர்ம நபர்கள் சிறுமியை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.பின்னர் ஒருவர் பின் ஒருவர் என மாறி மாறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.அதன் பிறகு அப்பகுதியில் இருந்து வெளியே சாலைக்கு வந்த சிறுமி கைபேசி மூலம் பெற்றோருக்கு நடந்தவற்றை கூறி புலம்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

பின்னர் காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சிறுமியின் செல்போன் எண்ணை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி வனப்பகுதியை காட்டவே அங்கு காயங்களுடன் இருந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும் சிறுமி மர்ம நபர்கள் குறித்து தெரிவித்த அடையாளங்களை கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services