டெல்லியில் தோழியுடன் கடைக்கு சென்ற 25 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்!

A CCTV camera has recorded the shooting death of a youth who was standing outside while shopping with his girlfriend in north-east Delhi.

வெளியில் தனது தோழியுடன் கடைக்கு சென்றிருந்த போது வெளியே நின்று கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

வட கிழக்கு டெல்லியில் உள்ள ரோகிணி செக்டர் -24 எனும் ஒரு மளிகை கடைக்கு சோலங்கி என்பவர் தனது பெண் தோழியுடன் சென்றுள்ளார். அவரது தோழி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது வெளியில் நின்றுகொண்டிருந்த சோலங்கி என்னும் 25 வயதுடைய இளைஞன் மீது ஏழு தோட்டாக்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அருகில் இருந்தவர்கள் அந்த பெண் கடைக்குள் இருந்ததாகவும், துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டே பெண் கடையிலிருந்து வெளியே வந்து தனது நண்பருக்கு உதவ வந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்களை அந்தப் பெண் துரத்தினாலும் அவர்கள் சிக்க வில்லை எனவும் கூறியுள்ளனர். குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுட்டுள்ளனர்.