ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ‘சந்திரயான்- 3’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியா தனது வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்தை இன்று தொடங்கியுள்ளது.
ISRO விஞ்ஞானிகளின் அயராத ஆசை இன்று இந்தியாவை தலைமுறை தலைமுறையாகப் போற்றும் ஒரு குறிப்பிடத்தக்க விண்வெளி ஒடிஸியை ஸ்கிரிப்ட் செய்யும் பாதையில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
unknown node