கடந்த சில நாள்களாக கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 72 பேர் இழந்து உள்ளனர்.மேலும் 58 பேர் காணவில்லை 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கனமழை பெய்வதால் வெள்ளத்தால் கேரளாவில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மீட்புப்படையினர் நிலச்சரிவுவில் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.நேற்று மலப்புரம் அருகே உள்ள கொட்டகண்ணு , சாத்தகுளம் ஆகிய பகுதியில் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.
unknown nodeஅப்போது ஒரு அதிர்ச்சியான காட்சியை பார்த்து மீட்புப்படையினர் அதிர்ந்து போனார். நிலச்சரிவுவில் கீது என்ற பெண் சிக்கி இறந்து உள்ளார்.அப்பெண் தன் மார்பில் அணைத்த படி தன் ஒருவயது குழந்தை உடன் நிலச்சரிவுவில் கீது சிக்கி இறந்து உள்ளார். இதை பார்த்த மீட்புப்படையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கண்கலங்கினார்.
unknown nodeபின்னர் அவர்களின் உடலை பத்திரமாக மீட்புப்படையினர் மீட்டனர். கீது கணவர் சரத் அந்த நிலச்சரிவுவின் போது அவர்களுடன் தான் இருந்து உள்ளார்.ஆனால் சரத் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்து உள்ளார்.