திரைப்படம் , தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி- சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி ரத்து  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி எனவும், படப்பிடிப்புகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அனுமதி எனதெலங்கானா மாநில முதல்வர்சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பொதுத்தேர்வு நடத்த முடியாது என்று அதனால், 10-ம் வகுப்பு மாணவர்கள்  பொதுத்தேர்வு இன்றியே அனைவரும் தேர்ச்சி எனவும் நேற்று  சந்திரசேகரராவ்அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.