Vasundhara Raje - Raman Singh - Shivraj Singh Chouhan [File Image]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 40இல் 27 இடங்களை கைப்பற்றியது. இதனால், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்துஹோமா மிசோரமின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களையும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்காளவில் முதன் முதலாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதல்வர் வேட்பாளரை நேற்றே அறிவிததது. அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராக நாளை பொறுப்பேற்பார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
ஆனால் 3 மாநில தேர்தல் வெற்றியை பெற்ற பாஜக இன்னும் மாநில முதல்வர்கள் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. ராஜஸ்தானில், வசுந்தரா ராஜே, தியா குமாரி மற்றும் பாபா பாலக்நாத் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. வசுந்தரா ராஜே கடந்த 2003, 2013 ஆகிய காலகட்டத்தில் 2 முறை ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
சத்தீஸ்கரில், மூத்த தலைவர் ராமன் சிங்கிற்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், மத்திய பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், ஐந்தாவது முறையாக மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…