7 ஆண்கள் வாகனத்தில் லிப்ட் கொடுத்து 32 வயதான பெண் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இமாச்சல பிரதேசத்தில் 32 வயதான பெண் காங்க்ராவின் பனாய் பகுதியில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தபோது அந்த பகுதியில் வந்த மரம நபர்கள் சிலர் தனது வாகனத்தில் லிப்ட் வழங்கி சலோலில் உள்ள ஒரு கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த இடத்தில அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மெக்லியோட்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் பண்ணையிலிருந்து மக்லியோட்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்களால் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலியானவர் திருமணமானவர் மற்றும் மூன்று குழந்தைகளின் தாய் என்றும் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கணவரிடமிருந்து தனித்தனியாக வசித்து வந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் காகல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலியானவர் அழைத்துச் செல்லப்பட்ட மக்லியோட்கஞ்சில் உள்ள ஹோட்டல் உரிமையாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.