கொரோனா பாதிப்பால் வங்கி கேசியரின் அசத்தலான ஐடியா!

Default Image

முதலில் சீனாவை தாக்கிய  கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்றநாடுகளையும்தாங்கி வருகிறது.  இதனால்,பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21  நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் மக்கள்அனைவரும் சுத்தமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு காசோலையை  அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்கிறார். 

இந்த  வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபர் ஒரு காசோலையை ஒரு ஜன்னல் வழியாக காசாளரிடம் கொடுக்கிறார். வங்கி கேசியர் ஒரு இடுக்கியை பயன்படுத்தி காசோலையை வாங்குகிறார். 

பின்னர் அவர் காசோலையை தனது மேஜையில் வைத்து,  அதன் மீது ஒரு நீராவி அயன் பாக்ஸ்-யை வைத்து தேய்கிக்கிறார் அதில் இருக்கும் வைரஸை கிருமி நீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war