கடந்த மாதம் 15-ம் தேதி லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் இருந்து உயிரிழப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.
இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இரு நாட்டு படைகளும் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இந்திய- சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின் வாங்கி உள்ளன.
இந்நிலையில், இராணுவ வீரர்கள் பேஸ்புக், பப்ஜி உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பாதுகாப்பு இந்த தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…