பிரபல பாலிவுட் நடிகையான ஜியா கான் தற்கொலைக்கு அவரது காரணம் அவரது காதலர் என வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.நடிகை ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் காதலனான நடிகர் சூரஜ் பஞ்சோலி மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
unknown nodeஇந்தி வில்லன் நடிகரான ஆதித்யா பஞ்சோலி -நடிகை ஜரீனா வகாபின் மகன்தான் இந்த சூரஜ் பஞ்சோலி.
unknown nodeதமது மகள் தற்கொலைக்கு சூரஜ்தான் காரணம் என்று குற்றம்சாட்டி ஜியாவின் தாயார் ரபியா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் அவர் கோரியிருந்தார். இந்நிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள மும்பை போலீசார் சூரஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ம் தேதி தொடங்கும் என்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.