#BREAKING: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம்

Permission to the Election Commission to withdraw the notification related to the Puducherry Local Election.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிப்பானையை திரும்ப பெற தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரை மற்றும் ஒதுக்கீடு செய்யும்போது தவறுகள் நடத்திருப்பதாகவும், பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையான வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்று சுயேட்சை எம்எல்ஏ பிரெகேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக புகார்கள் தொடர்ந்து வருவதால், அதை மறுவரையரை செய்வதற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தது. எனவே, புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமில்லை என்று கூறியது.

வரும் 21ம் தேதி நடத்தவுள்ள உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என்றும் விசாரணையை அக்.7க்கு ஒத்திவைக்க புதுச்சேரி அரசு தரப்பு கோரிய நிலையில், வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப்பெறுவதாக புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் வார்டு குளறுபடிகளை சரி செய்து புதிய அறிவிப்பாணையை 5 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.