கனடா – இந்தியா அறக்கட்டளையிலிருந்து கோல்டன் லங்கர் கோயிலுக்கு ரூ.11,56,989 நன்கொடை.!

கனடா – இந்தியா அறக்கட்டளையிலிருந்து கோல்டன் லங்கர் கோயிலுக்கு பெரிய நன்கொடை கிடைதுள்ளது.
கனடா இந்தியா அறக்கட்டளை அமிர்தசரஸில் உள்ள கோல்டன் லங்கர் கோவிலுக்கு இந்திய மதிப்பில் ரூ. 11,56,989 நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் அன்னதானம் பெற்று வருவது வழக்கம்.
2007 இல் அமைக்கப்பட்ட, சிஐஎஃப் என்பது இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழு ஆகும். கோல்டன் கோயில் லங்கர் நேரடியாக நன்கொடை வழங்க வேண்டும் என்ற இந்தோ-கனேடிய புலம்பெயர்ந்தோரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்தியாவுக்கு சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் நன்றி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் இப்போது கோல்டன் கோயில் லங்கர் கோவிலுக்கு நேரடியாக நன்கொடை அளிக்க முடியும் என்ற செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்று சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025