கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி , காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.
unknown nodeகர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். நாம் சகோதரர்கள். எனவே இரு மாநில விவசாயிகளின் நலனும் முக்கியம். அதனால் நீரை சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.